Monday, 29 September 2014

சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

ஆண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப் பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண் டாகும். நெற்றியில் ரேகை இலலா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாகஇருக் கும்.

4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ்உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் – அழகான, சிறிய வாய் உடையவர்கள்புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக,அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

7. கழுத்து – ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷ்டமாம்.மிக உயரமாகவோ, மிகக் குட்டையாக வோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால்வறுமையாம்.

8. தோள் – தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின்செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள்உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கறுப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கறுத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்க ளை உடையவர்கள் கல்வி மான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதி கம் வரும். வரி சை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..

11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின்அதிர்ஷடமாம். மேல்செவி உள்ளே மடங் கியிருப்பின் கபடதாரி.

12. கைகள் – நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன்ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம் புதல் கூடாது.கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின்செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலி ருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும்.மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள்உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும்போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந்தால்கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந் தால் அற்பஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சம மான உயர த்தோடு தட்டையாக இருப்பின்அரசனாவான்.

15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம்இருக்கும்..

16. வயிறு – பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர்கள்எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.
18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப் பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.

மச்ச சாஸ்திரம் மச்ச பலன்

பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. 

இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.

புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.

காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.

மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
.
உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.

தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.

கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.

பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.

இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.

பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.

*******
.

ஆண்களுக்கான மச்ச பலன்

புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

*****

பெண்களுக்கான மச்ச பலன்

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்
வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை

Tuesday, 5 August 2014

குணாதிசயம்

குணாதிசயம்  

தெரிந்தோ  தெரியாமலோ  நிறைய பேருடன் பழகுகிறோம்.  மனிதர்களோடு  பழகுவது  மிருகங்களோடும்  பறவைகளோடும்  பழகுவது போல் அல்ல.   புலி அருகில் சென்றால்  கொன்று விடும்.  தின்றுவிடும் என  தெரியும்.    பூனை  பிராண்டும்.  நாய் கடிக்க சான்ஸ்  அதிகம்.  குரங்கு  கூட்டுக்குள்ளே  இருந்து பார்க்க நல்லது. அது போல்  பறவைகள்  சில.  நம்மோடு  அவை  நெருங்குவதே  இல்லை.   

மனிதர்கள்  அப்படி  இல்லை.  

 எவர் எப்படி  என்று  அறிந்து கொள்ள  ஆறு  அறிவு  போறாது.  பார்ப்பதற்கும், பழகுவதற்கும்  நிறைய  வித்யாசம்  இருக்கிறது.  எடை  போடவே  முடியாது. 

சில மனோ தத்துவ  நிபுணர்கள் நிறைய  ''இது''  போன்றவர்களை  அணுகி  பழகி   நூற்றில்  50க்கு  மேல்  எப்படியான  ஆசாமிகள்  என்று  கணித்து வைத்திருக்கிறார்கள்.  அதை  இன்று  படிக்க நேரிட்டது  எனது  பூர்வ  கர்ம பலன்  ஆகும்.  சுருக்கமாக  சொல்ல  விழைகிறேன்.   இதை படிக்கும்போதே எனக்கு  அருகில்  இருப்பவர்களை  நான்  பார்த்தது   இன்று  காலை பார்த்தது  போல்  இல்லை. 

நாலு  பேர்  உட்கார்ந்து  பேசிக்கொண்டிருக்கும்போது  ஒரு  ஆசாமி  சாதாரண  அறுவை  ஜோக்குக்குகூட  விழுந்து விழுந்து  சிரிக்கிறானா அவன்  உள்ளுக்குள்ளே  தனிமையில்  வாடுபவன்  என்று  அறிந்து கொள்.   

 எப்போது பார்த்தாலும்  கும்பகர்ணனா?  எப்பவுமே  தூக்கம் தானா?   ''இல்லை  கொஞ்சம்  டயர்டு''   ''வேலை  ஜாஸ்தி. '   ஏதோ  அவன்  பதில்  சொன்னாலும்  மனோ தத்துவ  நிபுணர்கள்  அவனை  அளந்து  வைத்திருப்பது     'அவன்  உள்ளூர  ஏதோ  துன்பத்தில்,  துக்கத்தில்  புழுங்குகிறான்.  வெளியே  சொல்லவில்லை''   என்பது  தான்.  

''எங்கே  உங்களை  ரொம்ப நாளாக  காணோம்  ஊரிலே  இல்லையா  என்று  சாதாரணமாக  கேட்டாலும்  ஏதோ  ஒரு  பதிலை  சொல்பமாக  சொல்கிறார்.  பாம்பே  போனேன்,  இல்லை  அங்கிருந்து ஹைதராபாத்,  திடீர்னு  பூனே  மாத்தி மாத்தி  ரொம்ப  ஜோலிகள். சில சமயம்  காபி  டீ  குடிக்க மட்டும்  இல்லை  குளிக்க  கூட  நேரம்  கிடைக்கலே  என்று  வேக வேகமாக  ஏதேதோ  தந்தி பாஷையில்  பேசுகிறாரா  ...  ஜாக்ரதை.  அவர்   சில பல  ரகசியங்களை  முழுங்கிவிட்டு  வெளியே  சொல்ல்லாதவர்   ,  அமுக்கு பூஷணிக்காய்  என்று  புரிந்துகொள்ளவேண்டும்.  

உணர்ச்சிகளை  எதிர்மாறாக  வெளிப்படுத்துபவர்  சிலர்.  எந்த  துக்கம்  வந்தாலும்  மனிஷன்  ஒரு சொட்டு  கண்ணீர்  கூட  வராது. இவர்  ஏதோ  கல்  நெஞ்சு  ஆசாமி  என்று  கருதாதீர்கள்.  ரொம்ப பூஞ்சை  மனசு தான்.  

சாப்பிடும்போது ஒருவர் அதிகமாகவே இலையில்  உணவை  காலி செய்கிறாரா?  மேலும் மேலும்  கேட்டு  இலை  மீண்டும்  துடைத்து விட்டாற்போல்  இருக்கிறதா? பசியால் கண்  பஞ்சடைந்தவரோ?  இல்லை.   அவர்  ''டென்ஸ்''   ஆக  இருக்கிறார்  என்று  அர்த்தம்.  உணர்ச்சிகளை உள்ளே  போட்டு  அமுக்கி  வைத்திருக்கிறார். வெளியிடவில்லை என்று பொருள் என்கிறார்கள் நிபுணர்கள். 

'' அடடா   அப்பிடியா''  என்று ஒன்றுமில்லாததற்கு  கூட  ஒருவர்   கண்ணீர்  வடிக்கிறாரா?  ஓஹோ அவர் ஒரு  அப்பாவி,  மென்மையான  இதயம்,  இரக்க  குணம் கொண்டவர்  என்று  அறிவதற்கு  மனோ தத்துவ நிபுணர் தேவையில்லை.   

  
ஒருவர்  எதற்கெடுத்தாலும்  கோபம் கொள்கிறாரா?  சின்ன விஷயங்களுக்கு  கூட எரிந்து  விழுகிராரர்  என்றால்  பாவம்  அவர்  அன்புக்கு  ஏங்குகிறார்  என்று  அர்த்தமாம். 

நான்  எதற்காக இந்த  விஷயங்களை சொல்கிறேன்  என்றால்  நாம்  ஒரு  தப்பான  உலகத்தில்  இருக்கிறோம்.  யாரோ  சொன்னபடி  எலுமிச்சம்பழ  ரசம்  குடிக்க வேண்டுமானால்   கெமிகல்  பவ்டர்  (லெமன் எஸ்ஸேன்ஸ்) டிராப்  தண்ணிரில்  கலக்கி குடிக்கிறோம்.  ஆனால்  கை கழுவ இளம் வெந்நீரில்  உண்மையான  எலுமிச்சம்பழத்தை  நறுக்கி  போட்டுகொள்கிறோம்.  !  என்ன  பண்பாடு இது?  அதனால்  தான்  அண்டை   அசல் அருகில்  எதிரில்  இருக்கும்  ஆசாமிகள் பற்றி  உஷாராக  தெரிந்துகொள்ள  இது  தேவையாக  இருக்கலாமே என  தோன்றியது